Monday, February 14, 2011

தனிமையின் நிமிடங்களில்

வைத்தவை வைத்தபடி
வைத்த இடத்தினில் இருக்க
அமைதியாய் கிடக்கிறேன்
விளக்கணைக்க மறந்தபடி நான்
அக்கரையில் உள்ளோர்
அக்கறையுடன் இருக்க
இக்கரையினில் அக்கறையைத் தேடி
கரைந்துதான் போனேன்
சக்கரையாய் கண்ணீரினில் நான்
திரை கடல் ஓடியும்
திரவியம் தேடினேன்
தேடிய பின் பார்த்தால்
தனிமையில் திரிகிறேன்
தனிமையின் நிமிடங்களில்
கண்ணயர்ந்து போகிறேன் நான்