Friday, March 25, 2011

என் அருமை கண்ணம்மா

என் அருமை கண்ணம்மா
உன் மனதில் என்னம்மா
உன் அவன் உனக்கு பக்கமா
இல்லையே என்ற வருத்தம்மா
நாங்கள் எல்லாரும் இருந்தும்மா
உன் மனதில் கவலை தோன்றும்மா
காதலில் தனிமை தானம்மா
உன் அன்பை பெறுக்கும் கணிதம்மா
வேம்பை உண்ட நாவிற்கு
சர்க்கரை தான் அமிழ்தம்மா
தனிமை இனிமை தான் என்று
அவனை பார்த்த பின்தான் உனக்கு புரியும்மா
காலமும் நேரமும் தானம்மா
உன்னை அவனிடம் சேர்க்கும் பாரம்மா
அதுவரை அமைதியாய் தானம்மா
நீ நம்பிக்கையுடன் இருந்து பாரம்மா
காதலை பற்றி உனக்கு தான்
நான் எடுத்து சொல்ல வேண்டும்மா ????

Wednesday, March 23, 2011

வாழ்வு

தரையில் விழுந்த பனிக்கட்டியாய் தான்
இந்த வாழ்வும் நமக்கு இருக்கிறதே
கடும் வெப்பத்தில் உருகும் பனியாய் தான்
காலம் நம்மை உருக்குகிறதே
நீராய் மாறி ஓடினாலும்
பின்னர் ஆவியாய் மாறி வானில் கலந்தாலும்
மீண்டும் மழையாய் பொழிந்தோமே
இந்தப் புவியில் விதையாய் விழுந்தோமே
பொழியும் மேகம் போகும் வழியில்
மீண்டும் பிறந்து வாழ்கின்றோம்
வந்து போன சுவடை மறந்து
மீண்டும் மீண்டு மாண்டு மடிகின்றோம்

Monday, March 7, 2011

மகளிர் மசோதா

மதியாளனவனின் மதிப்பை
பெண்பாற் கொண்டு
மதிப்பெண்ணாய் மதிப்பிடும்
இவ்வையத்தில் ஏனோ
மறுக்கின்றனர் அரசாட்சியில்
முப்பத்தி மூன்று சதவிகிதத்தை
உயர்த்துவதற்கு
மதியாள் அவளின் பங்களிப்பை

Monday, February 14, 2011

தனிமையின் நிமிடங்களில்

வைத்தவை வைத்தபடி
வைத்த இடத்தினில் இருக்க
அமைதியாய் கிடக்கிறேன்
விளக்கணைக்க மறந்தபடி நான்
அக்கரையில் உள்ளோர்
அக்கறையுடன் இருக்க
இக்கரையினில் அக்கறையைத் தேடி
கரைந்துதான் போனேன்
சக்கரையாய் கண்ணீரினில் நான்
திரை கடல் ஓடியும்
திரவியம் தேடினேன்
தேடிய பின் பார்த்தால்
தனிமையில் திரிகிறேன்
தனிமையின் நிமிடங்களில்
கண்ணயர்ந்து போகிறேன் நான்

Thursday, January 20, 2011

கண்ணாடி

கண்ணிரண்டு இருந்தால்
கண்ணிமைக்க மறக்குமடி
வாயொன்று இருந்தால்
உந்தன் அழகை பற்றி பாடுமடி
காலிரண்டு இருதால்
உந்தன் பின்னால் நடக்குமடி
உயிரொன்று இருந்தால்
உனக்கதை தருமடி
உன் முன்னாடி
இருக்கும் கண்ணாடி...