என் அருமை கண்ணம்மா
உன் மனதில் என்னம்மா
உன் அவன் உனக்கு பக்கமா
இல்லையே என்ற வருத்தம்மா
நாங்கள் எல்லாரும் இருந்தும்மா
உன் மனதில் கவலை தோன்றும்மா
காதலில் தனிமை தானம்மா
உன் அன்பை பெறுக்கும் கணிதம்மா
வேம்பை உண்ட நாவிற்கு
சர்க்கரை தான் அமிழ்தம்மா
தனிமை இனிமை தான் என்று
அவனை பார்த்த பின்தான் உனக்கு புரியும்மா
காலமும் நேரமும் தானம்மா
உன்னை அவனிடம் சேர்க்கும் பாரம்மா
அதுவரை அமைதியாய் தானம்மா
நீ நம்பிக்கையுடன் இருந்து பாரம்மா
காதலை பற்றி உனக்கு தான்
நான் எடுத்து சொல்ல வேண்டும்மா ????
Friday, March 25, 2011
Wednesday, March 23, 2011
வாழ்வு
தரையில் விழுந்த பனிக்கட்டியாய் தான்
இந்த வாழ்வும் நமக்கு இருக்கிறதே
கடும் வெப்பத்தில் உருகும் பனியாய் தான்
காலம் நம்மை உருக்குகிறதே
நீராய் மாறி ஓடினாலும்
பின்னர் ஆவியாய் மாறி வானில் கலந்தாலும்
மீண்டும் மழையாய் பொழிந்தோமே
இந்தப் புவியில் விதையாய் விழுந்தோமே
பொழியும் மேகம் போகும் வழியில்
மீண்டும் பிறந்து வாழ்கின்றோம்
வந்து போன சுவடை மறந்து
மீண்டும் மீண்டு மாண்டு மடிகின்றோம்
இந்த வாழ்வும் நமக்கு இருக்கிறதே
கடும் வெப்பத்தில் உருகும் பனியாய் தான்
காலம் நம்மை உருக்குகிறதே
நீராய் மாறி ஓடினாலும்
பின்னர் ஆவியாய் மாறி வானில் கலந்தாலும்
மீண்டும் மழையாய் பொழிந்தோமே
இந்தப் புவியில் விதையாய் விழுந்தோமே
பொழியும் மேகம் போகும் வழியில்
மீண்டும் பிறந்து வாழ்கின்றோம்
வந்து போன சுவடை மறந்து
மீண்டும் மீண்டு மாண்டு மடிகின்றோம்
Monday, March 7, 2011
மகளிர் மசோதா
மதியாளனவனின் மதிப்பை
பெண்பாற் கொண்டு
மதிப்பெண்ணாய் மதிப்பிடும்
இவ்வையத்தில் ஏனோ
மறுக்கின்றனர் அரசாட்சியில்
முப்பத்தி மூன்று சதவிகிதத்தை
உயர்த்துவதற்கு
மதியாள் அவளின் பங்களிப்பை
பெண்பாற் கொண்டு
மதிப்பெண்ணாய் மதிப்பிடும்
இவ்வையத்தில் ஏனோ
மறுக்கின்றனர் அரசாட்சியில்
முப்பத்தி மூன்று சதவிகிதத்தை
உயர்த்துவதற்கு
மதியாள் அவளின் பங்களிப்பை
Subscribe to:
Posts (Atom)