Friday, September 10, 2010

நேற்று...இன்று...

உன் கண்ணில் இருந்து

விழும் நீரின் கரிப்பு கூட

கனிந்து போனதடி

நீ உதிர்த்த புன்சிரிப்பில்

நேற்று

கரிந்து தான் போனதடி

என் உள்ளம்

உன் நினைவுகள்

என்னை சுட்டபொழுது

இன்று

பாரம்

நிழலைக் கூட

நிலத்தில் விழாமல்

தாங்கி நின்றேன்

உன்னை

உடைந்து தான் போனேன்

பாரம் தலைக்கேறியதல்

Friday, September 3, 2010

காதல்

அ அம்மா என்று

சொல்லப் பழகினேன்

அ அப்பா என்று

எழுதப் பழகினேன்

எதைப் பழகியபோதும்

பெற்றவர்களை நினைத்த

என்னை

கவிதை படைக்க வைத்தாய்

உன்னை நினைத்து

நட்பு

சுற்றத்தின் சொற்களால்

துளைக்கப்பட்ட என்னை

தொலைத்து எடுத்தேன்

நட்பு என்னும் அருவியில்

நனைந்த பொழுது