Wednesday, March 23, 2011

வாழ்வு

தரையில் விழுந்த பனிக்கட்டியாய் தான்
இந்த வாழ்வும் நமக்கு இருக்கிறதே
கடும் வெப்பத்தில் உருகும் பனியாய் தான்
காலம் நம்மை உருக்குகிறதே
நீராய் மாறி ஓடினாலும்
பின்னர் ஆவியாய் மாறி வானில் கலந்தாலும்
மீண்டும் மழையாய் பொழிந்தோமே
இந்தப் புவியில் விதையாய் விழுந்தோமே
பொழியும் மேகம் போகும் வழியில்
மீண்டும் பிறந்து வாழ்கின்றோம்
வந்து போன சுவடை மறந்து
மீண்டும் மீண்டு மாண்டு மடிகின்றோம்

1 comment: