வைத்தவை வைத்தபடி
வைத்த இடத்தினில் இருக்க
அமைதியாய் கிடக்கிறேன்
விளக்கணைக்க மறந்தபடி நான்
அக்கரையில் உள்ளோர்
அக்கறையுடன் இருக்க
இக்கரையினில் அக்கறையைத் தேடி
கரைந்துதான் போனேன்
சக்கரையாய் கண்ணீரினில் நான்
திரை கடல் ஓடியும்
திரவியம் தேடினேன்
தேடிய பின் பார்த்தால்
தனிமையில் திரிகிறேன்
தனிமையின் நிமிடங்களில்
கண்ணயர்ந்து போகிறேன் நான்
awesome! Loved it
ReplyDeleteRomba nalla iruku!!!
ReplyDeleteSuperbb one. :)
ReplyDelete